வவுனியா நலன்புரி முகாமில் உள்ளவர்களுக்கு விரைவில் காணிகள்!!

508

Land

உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான 97 குடும்பங்களுக்கான காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்ட நலன்புரி முகாமில் தங்கியுள்ள குடும்பங்களுக்கே இந்த காணிகள் வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, புளியங்குளப்பகுதியிலும், சின்னமடம் பகுதியிலும் இவர்களுக்கான காணிகள் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான கூட்டம் ஒன்றின்போதே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.