மாத்தறை, ஹக்மன, பன்னவில பிரதேசத்தில் பெண்ணொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர் 69 வயதான பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீராடுவதற்காக வீட்டில் இருந்து சென்ற குறித்த பெண், வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால் உறவினர்கள் தேடி சென்ற போதே அவர் இவ்வாறு இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.






