களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – அறுவர் படுகாயம்

739

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் விடுதி மாணவர்கள் மற்றும் வெளி மாணவர்களுக்கு இடையில் இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் நால்வர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.