சினிமாவில் நடித்து பலரை சிரிக்க வைத்த குள்ள நடிகர் ராஜாவுக்கு, உடல்நலம் சரியில்லாததால் மனைவி துணி விற்று சாப்பாடும் போட்டு மருத்துவ செலவையும் கவனித்து வருகிறார்.
குள்ள நடிகர் ராஜா தற்போது சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார். சினிமாவில் நடித்து பிரபலமான ராஜா, 24 வயதில் கற்பகம் என்ற பெண்ணை மணந்தார், இவரும் குள்ளமான நடிகை தான், பேரழகன் படத்தில் சிநேகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இவர்களுக்கு ஆனந்த் என்ற மகன் இருக்கிறார், தற்போது 22 வயது ஆன நிலையிலும் இவரும் குள்ளமாகவே இருக்கிறார். இதனால் இவர்கள் மூன்று பேருக்கும் உடல் ஊனமுற்றவர்கள் என்ற சான்றிதழை அரசு வழங்கியுள்ளது.
சினிமாவில் நடித்தாலும் அந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ராஜாவுக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்.
எனவே குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் இவர்கள் வீட்டின் ஒரு பகுதியை கடையாக மாற்றி ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
மனைவி கற்பகம் ஜவுளி வியாபாரத்தை பார்த்துக் கொள்வதுடன், கணவரின் மருத்துவ செலவுகளையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் எங்களது இந்த நிலையை கருத்தில் கொண்டு, இரக்கம் காட்டி தமிழக அரசு உதவிபுரிய வேண்டும் என முதலமைச்சருக்கு ராஜா மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.






