வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்க வேண்டாம் என்று தெரிவித்து இன்று (11.07.2016) காலை 11 மணியளவில் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரிக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒன்றியம் இலங்கை விவசாயக் கல்லூரி வவுனியா ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும் இப் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டாம் என்று கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
A9 வீதியின் ஓரமாக நின்று ஒரு மணித்தியாலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைத்து, தமது கற்றலுக்கு பாதிப்பை ஏற்பாடுத்தாதீர்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியை இல்லாது செய்யாதீர்கள் என்பதனையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.














