பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நாளை மறுதினம் புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரேசா பதவியேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியிலிருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.