வவுனியாவில் புகைத்தல், மதுபோதை, இலஞ்ச ஊழல் போன்றவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி இன்று (12.07.2016) காலை 11 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடு இடம்பெற்றதுடன் முச்சக்கரவண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வெளிச்செயற்பாட்டு இளைஞர்கள், யுவதிகள் இளையோர் தலைமைத்துவ கற்கைநெறி மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.












