வவுனியாவில் புகையிரதக் கடவைக்காப்பாளர் சங்கம் இன்று முதல் தமக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று(12.07.2016) காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட புகையிரத கடவைக் காப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டுள்ளார்.
புகையிரத கடவைக் காப்பாளர்கள் இம் மாதம் 3ம் திகதி வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























