மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் சர்ச்சைகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அரசின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினருடன் நேற்று மாலை ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே இதற்கு இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 6 காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், குறித்த கலந்துரையாடல் மூலம் நல்ல பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.