கஹதுடவ – சிங்ஹகம பகுதியில் கூறிய ஆயுதம் ஒன்றினால் தக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலத்தை இன்று (12) காலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.உயிரிழந்தவர் 44 வயதான சிங்ஹகம பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கூறிய ஆயுதம் ஒன்றினால் தலைப்பகுதியில் தாக்கப்பட்ட அடையாளமொன்று சடலத்தில் காணப்பட்டதகவும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சற்றுத் தொலைவில் கத்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கஹதுடவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இதேவேளை குறித்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தன