11 வயது மாணவியை கொலை செய்து புதைத்துவிட்டு, தானும் தற்கொலை செய்த இளைஞன் : நடந்தது என்ன?

684

Abu

தமிழகத்தில் நபர் ஒருவர் 11 வயது மாணவியை கொலை செய்து புதைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கணபதியேந்தலை சேர்ந்தவர் ஜெயா, இவரது மகள் காளீஸ்வரி மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம் போல காளீஸ்வரி நேற்று காலை பள்ளிக்கு சென்றுள்ளார், மாலை வெகு நேரம் ஆகியும் காளீஸ்வரி வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா பள்ளி சென்று விசாரித்த போது கார்த்திக் என்ற நபர் அழைத்து சென்றது தெரியவந்தது, இதனால் மாணவியின் அம்மா கார்த்திக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார், அப்போது பதிலளித்த கார்த்திக் உன் மகளை கொலை செய்து புதைத்து விட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த ஜெயா பொலிசில் புகார் செய்தார், மேலும் பொலிசார் விசாரித்த போது கார்த்திக் கழுத்து அறுத்த நிலையில் கண்மாயில் கிடப்பதாக தெரியவந்தது, உடனே பொலிசார் அங்கு சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பொலிசார் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று அதிகாலை காளீஸ்வரியின் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர், இது மாவட்ட ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இக்கொலை சம்பவம் குறித்து கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் அல்லது பலாத்கார முயற்சியில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கிடந்த கார்த்திக் பொலிசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை வேறு யாரும் கழுத்தை அறுத்து சென்றுவிட்டார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.