வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்கள்?

476

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

மேற்படி சந்திப்பு வவுனியாவிலுள்ள சுவர்க்கா விடுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்களை பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதுவிடயம் தொடர்பில் தாம் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

வவுனியாவில் 2100 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினூடாக 3000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரகு உடனிருந்தார்.