நாமல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி!!

631

Namal Rajapaksha

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாம்ல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவுகளுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொள்ள அனுமதியளிக்குமாறு நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை ஆணையாளரிடம் நேற்று கோரியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் கோரிக்கையை சிறைச்சாலை ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்படி நேற்று முதல் வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொள்ள நாமலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.