15 அத்தியவசியப் பொருட்களின் உத்தேச விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று அமைச்சரவை கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சீனி, பருப்பு, உருழைக்கிழங்கு, கருவாடு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 15 இன் உத்தேச விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.






