வவுனியா மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை!!

1333

Kavinaya

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டியில், பிரிவு ஒன்றுக்கான இசையும் அசைவும் போட்டி நிகழ்வில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் செல்வி. கவிநயா அரவிந்தன் முதலிடம் பெற்றுள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டம் பெற்றுக்கொண்ட ஒரே முதலிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் இவர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் Dr. தேவராஜா அரவிந்தன், இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய ஆசிரியை திருமதி. ஜனந்தினி அரவிந்தன் ஆகியோரின் புதல்வியாவார்.

இவரை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

21