வவுனியா மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து இன்று(13.07.2016) காலை வவுனியா தினச்சந்தைப் பகுதியிலிருந்து பேரணியாக வவுனியா மாவட்ட செயலகம் சென்று மாவட்ட அரசாஙக அதிபர் எம்.பி.புஸ்பகுமராவை சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
அம் மனுவில் வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், விவசாயிகளின் போக்குவரத்தினை கருத்திற்கொண்டு தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்துத் தருமாறும் கோரியே அம் மனுவினை வவுனியா மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளனர்.






























