கிளிநொச்சியில் பரிதாபகரமான நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

942

Body 1

கிளிநொச்சி – முரசுமோட்டை, சேற்றுக்கண்டி பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (13.07.2016) மாலை மீட்கப்பட்டுள்ளது.

முரசுமோட்டை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சகாதேவன் சுமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி நபர், ஆற்றில் நீராடச் சென்ற போது உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த, சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பி இரண்டு மணித்தியாலங்கள் கடந்த வேளையிலும் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என ஊர்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, இறந்தவரின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Body 2