வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் மைதானம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

646

 
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுதிட்டப் பகுதியில் 4 ஏக்கர் விஸ்தீரமான விளையாட்டு மைதானம் அரச ஊழியர் வீட்டுத்திட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கு.சண்முகலிங்கம் தலைமையில் அமைக்கும்பணி ஆரம்பிக்கப்பட்டது.

அரச ஊழியர்கள் தமக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும்முகமாக கடந்த 11.07.2016 மாலை 5.30 மணியளவில் அரச ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து இவ் விளையாட்டு மைதானத்தை துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்துடன் விளம்பரப் பலகையையும் திறந்துவைத்தனர்.

4 ஏக்கர் விஸ்தீரமான இவ்விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பாதை, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கட் விளையாட்டுக்கள் விளையாடுவதற்கேற்ப அமைக்கப்படவுள்ளது.

1 20160711_173241 20160711_173745