வவுனியா கிடாச்சூரி மாணவி தேசிய ரீதியில் தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

1324

 
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 இல் கல்வி கற்கும் செல்வி தர்மிதா சசிகுமார் தேசிய ரீதியில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு ஒன்றில் இடம்பெற்ற பாஓதல் நிகழ்வில் முதலிடத்தைப்பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம் மாணவியை தமிழ்ப்பாட ஆசிரியர் திருமதி கனகாம்பிகை சிவனேந்திரன் மற்றும் சங்கீத ஆசிரியை செல்வி தமிழினி சொக்கலிங்கம் இருவரும் இணைந்து தயார்ப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு மாகாண ரீதியில் இடம்பெற்ற போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இம் மாணவியை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் ஆகியோருடன் இணைந்து வவுனியா நெற் இணையத்தளமும் தனது வாசகர்களுடன் இணைந்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

12143322_115201452169805_5200397966765582437_n 13322065_1724145001179617_5617305843759261423_n 13332736_1724144981179619_5955991199627274049_n (1) 13332736_1724144981179619_5955991199627274049_n 13606633_1737491633178287_1525147158050961537_n 13615128_1737491599844957_2694091547445523155_n