முதலை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

444

arrest (1)
முதலை இறைச்சியுடன் பொலன்னறுவை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பொலன்னறுவை – தேசிய பூங்கா பகுதி பரகாசு வில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மெதிரிகிரிய பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் பல நாட்களாக இவ்வாறு முதலைகளை கொலை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.