பாதணியில் பிஸ்கட் கடத்தியவர் கட்டுநாயக்கவில் கைது!!

256

Buying-Gold-Biscuit-In-Mumbai
சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை காலணியில் மறைத்து வைத்து இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.ஆறு தங்க பிஸ்கட்களை இந்தியாவின் மும்பை நகரிற்கு எடுத்துச்செல்ல இந்த நபர் முயற்சித்துள்ளார்.

கண்டி கடுகஸ்தோட்டையைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று நள்ளிரவு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல் 141 ரக விமானத்தில் மும்பை நோக்கிப் பயணிக்க இந்த நபர் முயற்சித்துள்ளார்.சந்தேகநபர் அணிந்திருந்த காலணிகளை கழற்றி சோதனையிட்ட போது காலணியின் அடிப் பகுதியில் நுட்பமான முறையில் தலா மூன்று தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.தங்கத்தின் எடை 600 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.