குளவிக் கொட்டுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

559

Hospital

திருகோணமலை – பதவியா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதவிய ஶ்ரீபுர ஜயந்தி மஹா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 70 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

07 ஆசிரியர்களும், பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் குளவிக் கொட்டு காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாடசாலையின் சிற்றூழியர்கள் சிலரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சிகிச்சைக்காக ஶ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் மேலதிக சிகிச்சைக்காக பதவியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.