சுவாதி மீது ராம்குமாருக்கு கோபம் வர காரணம் என்ன : திடுக்கிடும் தகவல்கள்!!

609

Swathi Murder

பொறியியலாளர் சுவாதி படுகொலை வழக்கில் மர்மங்கள் பல நிறைந்துள்ள நிலையில் சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்கள் குறைவாக இருப்பதால் ராம்குமாரிடம் எந்த கேள்விகளை கேட்க வேண்டும் என்று பொலிஸார் ஏற்கனவே முடிவு செய்து அதை தயாராகவும் வைத்துள்ளனர்.

ராம்குமாரிடம் நேற்று முதலே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை விவரங்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதில் பொலிஸார் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

ராம்குமாரின் விசாரணை விவரங்களை வெளியிடக்கூடாது என பொலிஸ் உயர் அதிகாரிக்ளுக்கு வாய்மொழியாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ராம்குமாரிடம் சில கேள்விகளை கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த பதில்கள் எங்களுக்கு திருப்தியாகவும், விசாரணைக்கு உதவியாகவும் இருந்தது” என்று மாத்திரமே கூறியிருந்தார்.

இன்னும் சில அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “விசாரணை நடத்திய பிறகு ராம்குமார் சோர்வடைந்து விட்டார். இதனால் ஒருசில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு நாங்களும் அங்கிருந்து சென்று விட்டோம்.

இன்று காலை பிலால், ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருவரின் பதில்களில் சில ஒரே மாதிரியாகவே உள்ளன.

ராம்குமாரிடம் தனியாக சில கேள்விகளை கேட்டோம். ‘சுவாதியை முதல் முதலில் எப்போது பார்த்தீர்கள்? என்று கேட்ட போது ராம்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

மேன்சனில் இருந்த சமயத்தில் அவ்வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்லும் போது சுவாதியை பார்த்தேன்.

அவரது பெயர் சுவாதி என்று அப்போது எனக்குத் தெரியாது. சுவாதியை பார்த்தவுடன் தனக்கு ஒருவித இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரிடம் பேச பல நாட்கள் முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.

அதற்காக அவரை பின்தொடர்ந்தேன். எங்கள் ஊரில் அழகான பெண்கள் இப்படி யாரிடமும் பேசமாட்டார்கள்.

ஆனால் சுவாதி என்னிடம் பேசியதால் அவரை காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் என் காதலை அவர் நிராகரித்து விட்டார்.

அதோடு அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறினார். இருப்பினும் அவரை என்னால் மறக்க முடியவில்லை.

அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. அவரை மிரட்டவே அரிவாளால் வெட்டினேன். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என கூறியதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுவாதியை எதற்காக கொலை செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, “சுவாதி மீது ஆத்திரம் ஏற்படுவதற்கு ஒரே காரணம் அவர் என்னை திட்டிய அசிங்கமான வார்த்தை தான்.

என் காதலை அவரிடம் சொன்ன போது அதை ஏற்று கொள்ளவில்லை என்று அமைதியாக சொல்லி இருக்கலாம்.

ஆனால் அதற்கு மாறாக அவர் என்னை அசிங்கமாக திட்டினார். குறிப்பாக என்னைப் பார்த்து தேவாங்கு என்று சொன்னார்.

இதுபோல என் வாழ்நாளில் யாரும் பேசியது இல்லை. பொதுவாகவே நான் யாரிடமும் பேச மாட்டேன். அமைதியாகவே இருப்பேன்.

புத்தகங்களைப் படிப்பேன். என்னை அவர் அவ்வாறு பேசியதால் அதை நினைத்து மனசுக்குள் வருந்தினேன்.

யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ள முடியாததால் பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். அவரது பேச்சு எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்துள்ளார்.

சுவாதி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறாரா? என்ற கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதில் அளித்துள்ளார் ராம்குமார்.

‘பேஸ்புக் மூலம் நிறைய பேசி இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். சுவாதி கொலை செய்த பிறகு யாரிடம் பேசினீர்கள்? என்ற கேள்விக்கு,

“மேன்சனில் தங்கி இருந்த என்னுடைய அத்தை மகன் மதனை பார்த்தேன். ஆனால் அவரிடம் எதையும் சொல்லவில்லை.

ஊருக்கு செல்வதாக மட்டும் சொன்னேன். ஊருக்கு சென்ற பிறகு என்னுடைய கவனம் முழுவதும் சுவாதி தொடர்பான செய்திகளிலேயே இருந்தது.

மேன்சனில் அவசரத்தில் இரத்தம் படிந்த சட்டையை வைத்து விட்டு வந்ததால் என்னை கண்டுபிடித்து விட்டனர்’ என ராம்குமார்” தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ராம்குமாரிடம் நடந்த விசாரணை முழுவதையும் பொலிஸார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

சுவாதியை எப்படி கொலை செய்தார் என்பதை நடித்து காட்ட, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கும் அவர் தங்கியிருந்த மேன்சனுக்கும் ராம்குமாரை பொலிஸார் அழைத்து செல்லவுள்ளனர்.