கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!

268

1 (14)
கம்பஹா – வெலிவேரிய பியரத்ன மாவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று மதியம் அவரது வீட்டில் வைத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொலை செய்த நபர் யார் என்பது இதுவரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கொலை சம்பவம் தொடர்பில் வெலிவேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.