இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் பலி!!

269

bcyE9RgBi
நுவரெலியா – ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்கு உட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடந்த மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக உருவெடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். சம்பவங்கள் இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 54 வயதான அய்யாக்கண்ணு என்பவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேரில் இருவர் ரிகில்ல கஸ்கட வைத்தியசாலையிலும் நால்வர் கண்டி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஹெங்குரங்கெத்த பொலிஸார் சம்பவம் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.