நான் தான் கொன்றேன் : மீண்டும் ராம்குமார் வாக்குமூலம்!!

837

Ramkumar

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்தனர். இவரை பொலிசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சுவாதியின் நண்பரும், இந்த வழக்கின் முக்கிய சாட்சியுமான பிலாலிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கை பொறுத்தவரையில் ராம்குமார் தான் குற்றவாளி, ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போதே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்.

அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டி இருந்ததால் காவலில் எடுத்து விசாரணை நடத்தினோம். மருத்துவமனையில் என்ன சொன்னாரே அதையே தான் மீண்டும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

அவரை ஒருதலையாக காதலித்ததும், தேவாங்கு என அசிங்கமாக திட்டியதும் தான் காரணம், அவர் தான் குற்றவாளி என்பதற்கு தேவையான சாட்சிகள் எங்களிடம் உள்ளன.

ராம்குமாரின் அறையிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தகறை படிந்த சட்டையை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து பார்த்ததில், சுவாதியின் ரத்தம் தான் என உறுதியாகியுள்ளது.

மேலும் அரிவாளிலும் ராம்குமாரின் கைரேகை உள்ளது, இன்னும் 15 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.