குடிவெறியில் மகளின் 6 வயது நண்பியை வன்புணர்வு செய்த மனித மிருகம்!!

298

Abuse

ஐதராபாத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் 6 வயது தோழியை, 30 வயதான நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யதுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் ஸ்ரீனிவாஸ் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், குற்றவாளி ஸ்ரீனிவாஸ் தனது மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன் காந்தி நகரில் வசித்துவந்துள்ளார். அருகிலுள்ள வீடுகளில் இருக்கும் ஸ்ரீனிவாஸ் மகளின் தோழிகள் சிலர் தினமும் ஸ்ரீனிவாஸ் வீட்டில் உறங்குவது வழக்கம்.

சம்பவத்தன்று வியாழக்கிழமை இரவு ஸ்ரீனிவாஸ் மது போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி, மற்ற குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு தன்னுடைய நான்கு குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு வீட்டை விட்டுச்சென்றுள்ளார்.

இதைதொடர்ந்து,ஸ்ரீனிவாஸ் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிகளில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மறுநாள் காலை பாதிக்கப்ட்ட சிறுமி தனது தந்தையிடம் சம்பவத்தை குறித்து தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து சிறுமியின் தந்தை பொலிசில் அளித்த புகாரை தொடர்ந்து பொலிசார் ஸ்ரீனிவாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.