தீவிரவாதிகளின் பார்வையில் சிக்கியுள்ள பிரான்ஸ் : ஒன்றரை ஆண்டில் 230 பேர் பலி!!

968

France

கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும், உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் செல்லக்கூடிய நாடாகவும் பிரான்ஸ் இருந்து வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக அமைந்துள்ள பிரான்ஸ் அண்மைய நாட்களில் அதிகளவான தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் இலக்காக பிரான்ஸ் மாறியுள்ளது என்றே கூறலாம். அந்தளவுக்கு அந்நாடு மீது கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரான்ஸை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 230 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7ஆம் திகதி “சார்லி ஹெப்டோ” என்ற ஊடக நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நேற்றைய தினம் வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

குறித்த ஊடக நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டு கொலை செய்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பாரிஸ் நகரில் வைத்து பெண் ஒருவர், சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அல்ஜீரியாவை சேர்ந்த சையத் அகமது என்பவர் கைது செய்த பொலிஸார், அவருக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இப்படி சிறிது சிறிதாக இடம்பெற்ற தாக்குதல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாரிஸ்சில் பாரிய தாக்குதலாகவே நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்த தாக்குதல் இடம்பெற்று முழுமையா ஒரு வருடம் கூட கழியாத நிலையில் நேற்றைய தினம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்திர் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது லொறியினை மேத செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 84 பேர் வரை கொலை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறிதும் பெரிதுமாக மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இழக்காகி இது வரைக்கும் 230க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தன் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு வரும் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பானது தனது தாக்குதலை மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளகூடிய வாய்ப்புள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.