நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!!

637

Dengu

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இவற்றுள் இரண்டு பாடசாலைகளும், இரண்டு முக்கிய அமைச்சுக் கட்டடங்களும் அடங்குவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இதுதவிர வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6500 இற்கும் அதிகமான இடங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றுள் சுமார் 4100 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கூறினார்.

மேல் மாகாணத்திலேயே நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான அதிக இடங்கள் அடையாளம் காணப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடுமுழுவதும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தங்களின் கடமையின் போது விடுக்கப்படும் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.