வன்னிப் பட்டறை, தமிழ் விருட்சம் வவுனியா மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் இணைந்து நடாத்திய தமிழர் பாரம்பரிய ஆடிப் பிறப்பு விழா இன்று (16.07.2016) சனிக்கிழமை காலை 9 மணிக்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் சிலைக்கு முன்னால் இடம்பெற்றது.
இவ் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்திற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, கலாச்சார,விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா கலந்து சிறப்பித்ததுடன்,
வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், உதவி அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்),செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர், வர்த்தகர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
-சுகுமார்-
































