துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!!

662

Fire

பிலியந்தலை – மஹரகம வீதியின் ஜெயமாவத்தை பகுதியில் காரொன்றில் சென்று கொண்டிருந்தவர் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 07.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நபர், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.