இலங்கை சிறையில் இருக்கும் 106 மீனவர்களை மீட்க நடவடிக்கை : சல்மான் குர்ஷித்..!!

443

salman-kurshid

இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். திமுக சார்பில் வசந்தி ஸ்டான்லியும் அதிமுக சார்பில் மைத்ரேயனும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சிறையில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.