விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய161 பயணிகள்!!

550

Flight

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சிறிது நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 161 பயணிகள்அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 161 பயணிகளுடன்ஒரு விமானம் துபாய் புறப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பது சில நொடிகளில் கண்டறியப்பட்டது.

இதனால் விமானிகள் உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். இதன் பின்ன இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, 3 மணி நேரம் தாமதமாக விமானம் துபாய்க்கு புறப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போதே கண்டறியப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.