பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ- 320 ரக விமானங்களை தரையிறக்கும் வகையில் விமான நிலையம் அபிவிருத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 200 பயணிகள் பயணிக்கக் கூடிய வகையான இந்த விமானங்களை தரையிறக்குவதற்கான ஓடுதளம் அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பில் இந்திய விமான நிலைய அதிகாரசபையினூடாக செயலாக்க ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எச்.எம்.சி.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
உள்ளக மற்றும் அயல் நாடுகளிலிருந்து விமான சேவைகளை பலாலி விமான நிலையத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.





