வவுனியாவில் இப்படியும் ஒரு சாதனையாளரா?

777

Sasikumar

வவுனியா தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் தனது பற்களால் 50 கிலோ எடைகொண்ட சீமந்துப் பையை மிகவும் சாதாரணமாக தூக்குகின்றார்.

இவரது திறமையை அறிந்த வவுனியா நெற் குழுவினர் அவருடன் தொடர்புகொண்ட போது, தான் கட்டட வேலை செய்வதாகவும் இது போன்று 2 நிமிடங்களில் 10 சீமந்துப் பைகளை தூக்கி சாதனை படைக்கவுள்ளதாகவும், மேலும் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதே தனது இலக்கு என்றும்,

இமயமலையில் ஏறிய முதல் தமிழன் என்ற சாதனையை தான் படைக்க விரும்புவதாகவும் அதற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்தார்.

இவரது சாதனைப் பயணம் தொடர எமது வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக இவருக்கு வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.