மொடல் அழகி கெளரவக் கொலை : சகோதரர் பரபரப்பு வாக்குமூலம்!!

295

625.0.560.350.160.300.053.800.668.160.90
பாகிஸ்தானின் சர்ச்சை மொடல் அழகி குவாந்தீல் பலூச்சை கெளரவ கொலை செய்த அவரது சகோதரர் வசீமை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குவாந்தீல் பலூச் (26). இவர் பாகிஸ்தானின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மொடலிங் துறையிலும் ஜொலித்து வருபவர்.

மேலும், சமூக வலைதளங்களில் ஏடாகூடமாக செல்ஃபி, அரைநிர்வாண புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவார். இதற்காகவே இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும்.தொலைக்காட்சி தொடர், மொடலிங் துறை ஆகியவற்றில் அவர் புகழ் பெற்றாலும், சமூக வலைதளங்களில் அவரது இந்த செயல் குடும்பத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் மொடலிங் துறையில் தொடர்ந்து இருக்க அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மொடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்பகிறது.ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத குவாந்தீல் பலூச் தொடர்ந்து அடாவடி செல்ஃபிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குவாந்தீல் பலூச்சை அவரது அவரது சகோதரர் வசீம் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.இதனையடுத்து அவரை தீவிரமாக தேடிய பொலிசார் நேற்று இரவு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவரது சகோதரர் வசீம் கூறியதாவது, சமூக வலைதளங்களில் குவாந்தீல் பலூச்சின் நடவடிக்கைகள் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டது.

இதில் அவள் மதகுரு முஃதி காவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளை கொன்றது அவளுக்கே தெரியாது. அவளுக்கு நான் மயக்க மருந்தை கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது தான் கழுத்தை நெறித்துக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.