வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் இன்று 14ஆம் நாள் 18.07.2016 திங்கட்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது .
இன்று அதிகாலை கிரியைகள் ஆரம்பமாகி பின்னர் எட்டுமணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து அம்பாள் ஒன்பது மணியளவில் தேரில்ஆரோகணித்து அதனை தொடர்ந்து தேர் திருவிழா இடம்பெற்றது.
நூற்றுகணக்கான அம்பாளின் பக்தர்கள் பங்குகொண்ட தேர் திருவிழாவில் சிலர் அடியடித்தும் காவடி பாற்குடம் கற்பூர சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவு செய்திருந்தனர் .
தொடர்ந்து மதியம் பன்னிரண்டு மணியளவில் பச்சை சாத்தும் நிகழவும் இடம்பெற்றது .