சின்னத்திரை என்றாலே பெரும்பாலும் அழுகை என்பதை தாண்டி சில நிகழ்ச்சிகள் தான் மகிழ்ச்சியை தரக்கூடியவை. அந்தவகையில் சிரிப்புக்கான கலக்கப்போவதுயார் என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மூலம் வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன், ரோபோஷங்கர் போன்றோரும் கலந்து கொண்டனர். இதில் குரேஷி வெற்றி பெற்றார்.
ஆனால் அனைவரையும் கவர்ந்தவர் நவீன். ஏனென்றால் இவர் வழக்கம்போல அஜித், விஜய் குரலில் பேசினாலும் கடைசியாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் குரலில் பேசி அசத்தினார். அனைவரும் எழுந்து நின்றி கைதட்டினர். சிவகார்த்திகேயன் எழுந்து வந்து பாராட்டினார்.