சர்ச்சையில்லாமல் சாமி இயக்கும் படம்!!

384

gangarruமிருகம், உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கங்காரு படத்தை இயக்கி வருகிறார்.

80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அமைதிப்படை இரண்டாம் பாகத்தைத் தயாரித்த வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

நாயகனாக புதுமுகம் அர்ஜுனா, நாயகியா வர்ஷா அஸ்வதி நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர்.சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் முதல் முறையாக இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்துக்காக கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளனர். சாய்குமார் கதை எழுத, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி, இயக்குகிறார் சாமி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்

தங்கையை அண்ணனும், அண்ணனை தங்கையும் கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுவது தான் படத்தின் கதை. போதாக்குறைக்கு காதலியும் காதலனை கங்காரு போல காப்பாற்றுகிறாராம்.

அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. எந்தவித செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைரமுத்துவுக்கான பாராட்டு விழாவாக நடத்தப் போகிறார்களாம். அக்டோபர் 14ம் திகதி சென்னை டிரேட் சென்டரில் விழா நடைபெற உள்ளது.