வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் சாதனை!!

806

Nedunkeney School

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் செல்வி ச.டிலக்சி தேசிய ரீதியில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 கவிதை ஆக்கப் போட்டியில் முதலிடத்தைப்பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வடக்கு வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இம் மாணவியை பாடசாலைச் சமூகம் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

இவரை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக நாமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

NET