வவுனியா நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று முன்தினம் (17.07.2016) முன்பள்ளி தலைமை ஆசிரியர் தலமையில் நடைபெற்றது.
இவ் விளையாட்டு விழாவில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, ஸ்ரீரெலோ செயலாளர் நாயகம் பா.உதயராசா, மகாறம்பக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிறேமதிலக்க மற்றும் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், காத்தார்சின்னக்குளம் கிராமசேவையாளர், சமூர்தி உத்தியோகத்தர், முன்பள்ளி பெற்றார் அசிரிய சங்கதலைவர் மற்றும் அங்கத்தவர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும்கலந்து சிறப்பித்தார்கள்.








































