ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைத் திகதிகள் வெளியீடு!!

1169

Examination_department

இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம் முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,959 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன் 350,701 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இதேவேளை விண்ணப்பதாரிகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்று (18.07) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறாவிடின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளது.