வவுனியாவை வந்தடைந்த நம்பிக்கையின் சுடர் பேரணி!!

923

 
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையின் சுடர் பேரணி ஐந்தாவது நாள் பயணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் நியூஸ் பெஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் நம்பிக்கையின் சுடர் பேரணியின் பயணம் ஆரம்பமாகியது.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நம்பிக்கையின் சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது வடமாகாண விளையாட்டுத்துறை உதவிப்பணிப்பாளர், வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

நம்பிக்கையின் சுடர் பேரணி ஏ9 வீதியூடாக ஆனையிறவு, கிளிநொச்சி ஊடாக வவுனியா நோக்கி பயணித்தது.

நேற்று வவுனியாவை வந்தடைந்த நம்பிக்கையின் சுடர் பேரணியின் இன்று வவுனியாவில் இருந்து புறப்பட்டது.

1 13694085_607822282710529_1071808626_o 13695006_607822126043878_49792926_n 13699492_607822229377201_1179620225_o 13702277_607822176043873_1939400310_o 13705269_607822142710543_1996621434_n 13728384_607822156043875_1260889685_o 13814598_607822109377213_1418972160_n