வவுனியா மணிவாசகர் சபையினர் நடாத்தும் மணிவாசகர் விழா 2016 இன்று(19.07.2016) காலை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் வவுனியா மணிவாசகர்சபை தலைவர் வை.செ.தேவராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியாதனந்தன், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோர் கலந்த கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
பேச்சு, பண்ணிசை, சொற்பொழிவு, சிறப்பு சொற்பொழிவினை தமிழருவி த. சிவகுமார் ஆற்றியிருந்தார். இறுதியாக மாணவர்களுக்கு பிரதம விருந்தினரால் சான்றிதழிகளும் வழங்கி வைக்கப்பட்டன். நன்றியுரையினை திருமதி. ஜயம்பிள்ளை ஓய்வு நிலை ஆங்கில உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆற்றினார்.
























