இலங்கை அகதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு!!

725

Dead

இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.

வன்னி மல்லாவியை சேர்ந்த 36 வயதான திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நித்திரைக்கு சென்ற நிலையில் மறு நாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற குறித்த நபர் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.