அவுஸ்திரேலியாவில் கைகுழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்தியப் பெண்!!

594

Sucide

அவுஸ்திரேலியாவில் 29 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இருந்து ஒரு இந்திய பெண் தனது கைகுழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த கன்னாராம் ஸ்ரீநிவாஸ் என்பவர் பிரபல நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சுப்ரஜா. இவருக்கு 5 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். இவர் அங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 அடுக்கு மாடிகளை குடியுருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சுப்ரஜா தனது கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய விக்டோரியா பகுதி பொலிசார், சுப்ரஜா தனது கைக்குழந்தையுடன் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவிற்கு சுப்ரஜாவின் உடலை கொண்டு வரும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.