ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் கைது..!!

415

IPL

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை பொலிசார் பலரை கைது செய்தனர். டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்ட முக்கிய தரகர் சந்திரேஷ் ஜெயினிடம் விசாரணை நடத்த மும்பை பொலிசார் முடிவு செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதிப்படி, மும்பைக்கு அழைத்து வரப்பட்ட ஜெயினிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்பு ஜெயினை மும்பை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சூதாட்ட வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.