வவுனியா குளத்தை அண்மித்த பகுதியிலிருந்து சடலம் மீட்பு!!

647

 
வவுனியா குளக்கரையில் பூந்தோட்டம் ஸ்ரீநகரை அண்டிய பகுதியிலிருந்து இன்று (20.07.2016) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

வவுனியா ஸ்ரீநகரைச் சேர்ந்த மயில்வாகனம் என்ற 66 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களாக இவரைக் காணவில்லை என்று போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

13699338_270330380007123_1224042484_o 13711557_270330370007124_956057385_o 13730732_270330390007122_1527859547_o