வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

503

 
வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று (20.07.2016) காலை கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாடு, இரு ஊழியர்கள் பணி நிறுத்தம், தனியார்துறையினரின் பிரவேசம் போன்ற கோரிக்கையினை முன்வைத்தே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக நகரசபை செயலாளரிடம் கேட்டபோது..

சம்பள முரண்பாடு தொடர்பாக உரியவர்கள் அறிக்கைமூலம் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தினால் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், பணியாளர்களின் பணிநிறுத்தம் தொடர்பாக தெரிவிக்கையில், குறித்த தொழிலாளி 24 மணிநேரத்திற்குள் விடுமுறை தொடர்பாக அறிவிக்கப்படாவிட்டால் சுற்றறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தனியார்துறை பிரவேசம் தொடர்பாக தெரிவிக்கையில், தொழிலாளர்கள் விடுமுறையில் சென்றால் அவ்விடத்தை தனியார்தறை ஊழியர் மூலம் நிரப்ப மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் விடுமுறையில் சென்றவரின் இடத்தை நிரப்பவே தனியார் துறையினரை பணிக்கு அமர்த்த உள்ளதாகவும் சிலரின் தேவயைற்ற தலையீடுகளால் பிரச்சனைகளை பெரிதாக்கிச் செல்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

இன்றைய வேலை நிறுத்தம் தொடர்பாக தமது கோரிக்கை மனுவினை நகரசபை செயலாளரிடம் கையளித்த ஊழியர்கள் வேலை நிறுத்த்தினை கைவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.

1 DSC_0035 DSC_0036 DSC_0037 DSC_0051 DSC_0054 DSC_0055 DSC_0056 DSC_0057 DSC_0060 DSC_0064 DSC_0065 DSC_0066 DSC_0067 DSC_0068