பல இன்னல்களுக்கும் முகம்கொடுத்த 15 பணிப் பெண்கள் நாடு திரும்பினர்!!

1336

Lady

வேலை வாய்ப்புக்காக குவைத் நாட்டுக்குச் சென்று பல்வேறு சிரமங்களுக்கும் முகம்கொடுத்த 15 பெண்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

தாம் பணிபுரிந்த இடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான இவர்கள், அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த நிலையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் அவர்கள் மீளவும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 15 பெண்களும், தமது வீடுகளுக்கு செல்ல தேவையான வசதிகளை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது.